இனி இந்த மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை – மத்திய அமைச்சர் விளக்கம்!!
மத்திய அரசின் மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை திட்டத்தின் விதிமுறையில் மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதையடுத்து தற்போது இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் பதிலளித்ததை பற்றி விரிவாக இப்பதிவில் பார்ப்போம்.
கல்வி உதவித்தொகை
நாட்டில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி படிப்பை தொடர கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு திடீரென இதனை ரத்து செய்து 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்தது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கூறியிருப்பதாவது, கல்வி உரிமைச் சட்டம் (RTE) 2009ன் படி உதவித்தொகை வழங்குவதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 9,10 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
புதிய ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்திய மத்திய அரசு – இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு!
Exams Daily Mobile App Download
மேலும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மற்றும் தொடக்கக் கல்வி கட்டாயமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 34.43 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான மெட்ரிக் கல்விக்கு முன் உதவித்தொகைக்காக ரூ.1,425 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.