தமிழகத்தில் மின் பற்றாக்குறை, மின்தடை? – அமைச்சர் விளக்கம்!
நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாட்டினால் பல மாநிலங்களில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் மின்தடை செய்யப்படுவது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் மின்தடை:
இந்தியாவில் மொத்தம் 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை இந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. பல்வேறு காரணங்களால் நாட்டில் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும் கடந்த சில மாதங்களில் இரட்டிப்பாடியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு நாளைக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அடுத்து வரும் காலத்தில் நாட்டில் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிமாக உள்ளது. இந்நிலையில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திருச்சியில் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் மின்தடை குறித்து பேசியுள்ளார். அதில், தமிழகத்தில் சீரான மின்விநியோகம் செய்யப்படுவதற்கு முதல்வர் வழிகாட்டுதலின் படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
பாரதி முன்பு ஹேமாவிடம் உண்மையை சொன்ன கண்ணம்மா? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
தமிழகத்துக்கு தினசரி 16 ஆயிரம் மெகாவாட் வேண்டும். அதில், 2,500 மொகா வாட் பற்றாக்குறை உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவின் படி தமிழகத்தில் மின்தடை இருக்காது. சீரான மின்விநியோகம் வழங்கப்படும். 1,500 மெகாவாட் அளவுக்கு வெளியில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரே ஆண்டில் 216 துணை மின் நிலையங்கள் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.