நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – தமிழக அரசு ஆணை!

0
நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு ஆணை!
நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு ஆணை!
நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – தமிழக அரசு ஆணை!

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அறவழியில் நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர் பலரின் மேல் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் இதற்கான அரசின் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் ஆணை:

முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் சிஏஏ சட்டம், வேளாண் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடிய விவசாயிகள், எட்டு வழிசாலை, கூடங்குளம் அணுமின் நிலையம், நியூட்ரினோ திட்டம் போன்றவற்றிற்கு எதிராக போராடிய பொதுமக்கள் மற்றும் ஆதரவு தெரிவித்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசு தொடுத்திருந்த 5,570 வழக்குகள் அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

பாரதி முன்பு ஹேமாவிடம் உண்மையை சொன்ன கண்ணம்மா? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்நிலையில், தமிழக அரசு இது தொடர்பான ஆணையை வெளியிட்டுள்ளது. அதில், தள்ளுபடி செய்யப்படும் வழக்குகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, போராட்டங்களின்போது தேச ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்படாது. நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணையில் உள்ள 341 வழக்குகள், நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள 105 வழக்குகள் என மொத்தம் 446 வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது.

Airtel பயனர்களுக்கு குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம் – டேட்டா, டாக் டைம் உடன்!

டாஸ்மாஸ் கடைகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணையில் உள்ள 339 வழக்குகள் மற்றும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் 83 என மொத்தம் 422 வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. இதனால் மொத்தமாக 868 வழக்குகள் தள்ளுப்படு செய்யப்படுகிறது. மேலும், போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது. கூடுதலாக நீதிமன்றங்களில் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 321ன்கீழ் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களால் உரிய சட்ட விதிகளின்படி வாபஸ் பெறப்படும் என்று அரசின் ஆணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!