பாரதி முன்பு ஹேமாவிடம் உண்மையை சொன்ன கண்ணம்மா? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா’ சீரியலில், ஹேமா தான் தனது 2 வது குழந்தை என்கிற உண்மை கண்ணம்மாவுக்கு தெரிகிறது. இந்த உண்மையை ஹேமாவிடம் கண்ணம்மா சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு சீரியலின் அடுத்த ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வாரங்களாக அடுத்த திருப்பங்களை கொண்டு நகர்கிறது. 8 வருடங்களுக்குக்கு பிறகு தனக்கு இரண்டாவதாக ஒரு குழந்தை உள்ளது என்ற உண்மை டாக்டர் மூலம் கண்ணமாவுக்கு தெரிய வருகிறது. கண்ணம்மா அந்த குழந்தை எங்கே உள்ளது என்று தேட ஆரம்பிக்கிறாள். அனைவரிடம் கேட்கிறார் யாரும் உண்மையை சொல்லவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி வெண்பா உன் குழந்தை என்னிடம் தான் உள்ளது. உனக்கு குழந்தை வேண்டுமென்றால் பாரதியை நீ டைவர்ஸ் செய்ய வேண்டும் என்று மிரட்டுகிறாள்.
கண்ணம்மா குழந்தை வேண்டும் என்பதற்காக பாரதியை டிவர்ஸ் செய்ய முடிவு செய்ய துணிகிறார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சௌந்தர்யா கண்ணம்மாவை பார்க்க வீட்டிற்கு செல்கிறார். இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் சௌந்தர்யா ஹேமா தான் உன் குழந்தைன்னு உண்மையை சொல்கிறார். சௌந்தர்யா. இதை கேட்ட அதிர்ச்சியில் கதறி அழுகிறாள்.அப்போது, கண்ணம்மா பாரதி வீட்டிற்கு சென்று ஹேமாவை பார்க்கிறார். பார்த்தவுடன் ஹேமா சமையலம்மா என கூற, கண்ணம்மா ஓடி வந்து ஹேமாவை அணைத்துக்கொள்கிறார்.
ஐபிஎல் 2021: விராட் கோஹ்லி முதல் தோனி வரை வீரர்கள் பெறும் சம்பளம் – டாப் 5 பட்டியல் இதோ!
பின்பு அங்கு அத்தை சௌந்தர்யா ஓடி வருகிற வரும் , கண்ணம்மா உண்மையை கூறி விடுவாரா என்ற பயத்தில் இரண்டாவது குழந்தை ஹேமாவுக்கு தான் அவருடைய அம்மா என்பதை கண்ணம்மா கூற நெருங்கி வருகிறார். இப்படி ட்விஸ்டுடன் சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. கண்ணம்மா நான் தன உன் அம்மா என்ற உண்மையை ஹேமாவிடம் கூறி விடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒன்றை காட்டுவார்கள் பின்பு கனவு என்பார்கள். லாஜிக் கே இடிக்கும் கதை. ஜவ்வுக்கு ஜவ்வு. முடிச்சு தொலைங்கப்பா.