தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை – மக்கள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை - மக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை - மக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை – மக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் தற்போது மின்துறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 23) எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் தொடர்ந்து 10 நாட்கள் மின் வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கு பின் தமிழகத்தில் மின்தடை போன்ற பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்தார். அதன்படி மின்வாரிய பணியாளர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை (ஜூன் 23) பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் புதிய கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் விற்பனை – மாணவர்கள் ஆர்வம்!

இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், சிறுநல்லிகோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்ப கவுண்டன்பாளையம், நாயக்கனூர், குறும்பலமஹாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

TN Job “FB  Group” Join Now

இதை தொடர்ந்து பரமத்தி வேலூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 வரை வேலூர் பரமத்தி, நல்லியம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரனாம்பாளையம், கோபணம்பாளையம் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!