தமிழகத்தில் புதிய கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் விற்பனை – மாணவர்கள் ஆர்வம்!
தமிழகத்தில் 2021-22 புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் ஆர்வத்தோடு வாங்கி வருகின்றனர்.
பாடப்புத்தகம்:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, இலவச புத்தகங்கள் வழங்கல் போன்ற பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் – மின்துறை அமைச்சர் உறுதி!!
இதை அடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான அச்சடிக்கப்பட்ட இலவச பாடப்புத்தகங்கள் அனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை நேரில் வரவழைத்து இலவச பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகம், அண்ணா நூலகம் உள்ளிட்ட இடங்களில் பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தனியார் பள்ளி மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பாடப்புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் வழக்கம் போல் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.