காஞ்சிபுரத்தில் நாளை (அக். 13) இந்த ஏரியாக்களில் மின்தடை – பொதுமக்களுக்கு அலர்ட்!
தமிழகத்தில் நாளை (அக். 13) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மின்தடை பகுதிகள்:
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மாதந்தோறும் மின்தடை ஏற்படும். அந்த வகையில் நாளை (அக். 13) மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. நாளை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விபத்துக்கள், மின்சார பழுதுகள் ஏற்படாமல் தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அது குறித்த அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட மின்சார செயற்பொறியாளர் பிரசாந் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!
Exams Daily Mobile App Download
அதன் படி வாலாஜாபாத், புத்தகரம், தேவரியம்பாக்கம், வாரணவாசி, ஊத்துக்காடு, நத்தாநல்லூர், தென்னேரி, சங்கராபுரம், கட்டவாக்கம், தொள்ளாழி, களியனூர், புளியம்பாக்கம், தம்மனூர், அவளுர், வரதராஜபுரம், அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், பூசிவாக்கம், வெங்குடி, ஒட்டிவாக்கம், கருக்குப்பேட்டை , தாங்கி, ஏகனாம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மின்தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்