தமிழகத்தில் இந்த பகுதிகளில் நாளை (அக். 14) மின்தடை – உங்க ஏரியா இருக்கா? உடனே பாருங்கள்!
தமிழக மின்சார துறையின் கீழ் இயங்கி வரும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட ஒரு நாள் மின்தடை ஏற்படும். அந்த வகையில் நாளை (அக். 13) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.அதனால் பல மாவட்டங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மின்சார விபத்துகள் அதிகம் ஏற்படாத வண்ணம் மின்சார பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை (அக். 14) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அந்த பகுதியில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வேண்டுமா? – 73,333 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதன் படி தேசிகாபுரம், கிழவிக்குளம், செந்தட்டியாபுரம், முதுகுடி, பட்டியூர், தெற்கு வெங்காநல்லூர், சோழபுரம், நல்லநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், வாழவந்தாள்புரம், அயன் கொல்லங் கொண்டான், காமாட்சிபுரம், இளந்திரை கொண்டான், நக்கநேரி, ஜமீன் கொல்லங்கொண்டான், கோட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்