சென்னையில் நாளை மறுநாள் (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை தாம்பரம் பகுதியில் நவம்பர் 27ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு வந்தது முதல் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தவறாது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் முதல் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் மின் இணைப்புகள் சரிபார்த்தல், மின் கம்பிகள் மாற்றுதல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை, தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் நாளை (நவ.26) பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் மூலம் மின் பயனர்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்தடை செய்யப்படுவது குறித்து முன்னதாகவே அந்தந்த பகுதி மின்வரியா செயற்பொறியாளர்கள் மக்களுக்கு தெரிவிக்கின்றனர். மேலும் இதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் மின் சார்ந்த பணிகளை முன்னதாகவே அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நவம்பர் 27ம் தேதி சென்னையில் தாம்பரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – வானிலை மையம் எச்சரிக்கை!
அதனால் ஜி.எஸ்.டி ரோடு, இந்திர காந்தி ரோடு, ஒலிம்பிய கோபுரம், மாரியம்மன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, திருச்செந்தூர் நகர், திருத்தணி நகர், பல்லவா பூங்கா, பெருமாள் நகர் பகுதி, 200 அடி துரைப்பாக்கம் சாலை, அழகப்பா நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.