தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – வானிலை மையம் எச்சரிக்கை!

0
தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - வானிலை மையம் எச்சரிக்கை!
தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - வானிலை மையம் எச்சரிக்கை!
தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – வானிலை மையம் எச்சரிக்கை!

தெற்கு வங்க கடற்பகுதியில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பெய்து வரும் தொடர் கனமழையால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை வெள்ளக்காடாக மாறியது. அதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் பலத்த மழை பெய்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

டிச.1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!

இந்த நிலையில் கடந்த 13 ம் தேதி வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வட ஆந்திராவை நோக்கி சென்று ஆந்திராவில் கனமழையை உருவாக்கியது. இந்த நேரத்தில் தமிழகத்தில் மழை சற்று ஓய்ந்தது. அப்போது நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது தெற்கு வங்க கடற்பகுதியில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நவம்பர் 29ம் தேதி வரை தமிழகம் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

VI பயனர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 2GB இலவச டேட்டா! முழு விபரங்கள் இதோ!

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் இன்று காலை முதல் மாலை வரை 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் காயல்பட்டினத்தில் கடந்த 10 மணி நேரத்தில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!