மதுரை, தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் நாளை (நவ.26) பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
வங்க கடலில் தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை பள்ளிகளுக்கு ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர், இயல்பு நிலை திரும்பியுள்ள காரணத்தால் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடத்தப்பட்டு, அந்த முடிவுகளின் அடிப்படையில், அடுத்தகட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆரம்ப நிலை மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் நேரடியாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – வானிலை மையம் எச்சரிக்கை!
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் முன்னதாக தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வெள்ள காடாக மாறியது. பல மாவட்டங்களிலிலும் கனமழையின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முன்னதாக தமிழக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்த காரணத்தாலும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வந்தது. இது சில நாட்களுக்கு முன்னர் தான் கரையை கடந்துள்ளது.
VI பயனர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 2GB இலவச டேட்டா! முழு விபரங்கள் இதோ!
ஆனால், தற்போது புதிதாக வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னதாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் காலை முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், மதியம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை தீவிரமடைந்துள்ளதால் நவம்பர் 26ம் தேதியான நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்தும், மதுரை, ராமநாதபுரம், திருவாரூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.