கோவையில் நாளை (மே 20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கோயம்பத்தூர் மாவட்ட உடுமலைபேட்டை பகுதியில் உள்ள மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (மே 20) அன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியது அவசியமான ஒன்று. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு துணை மின் நிலையங்களில் விபத்துகள் நேரிடும். அவற்றை தவிர்ப்பதற்காக மாதம் ஒருமுறை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை பராமரிப்பது மிக முக்கியம்.
TN TRB 1060 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – மே 20 முதல் சான்றிதழ் பதிவேற்றம்!
மின் ஊழியர்கள் மூலம் இந்த பராமரிப்பு பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை மேற்கொள்ளப்படுவதால் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதாவது பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே மின்வாரியம் மூலம் அறிவிப்புகளும் சென்று விடும்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் நாளை (மே 20) வெள்ளிக்கிழமை அன்று கோயம்பத்தூர் மாவட்ட உடுமலை பகுதிக்கு அடுத்துள்ள இந்திரா நகருக்கு உட்பட்டுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால் காலை 9 மணியில் தொடங்கி 5 மணி அளவு அப்பகுதியை சுற்றியுள்ள தாந்தோணி, தூங்காவி, ஆர்.ஜி.புதூர், குமாரமங்களம்,வெங்கிட்டாபுரம், மலையாண்டிபாட்டனம், பாறையூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.