TN TRB 1060 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – மே 20 முதல் சான்றிதழ் பதிவேற்றம்!
தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இத்தேர்வுக்குரிய முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழை நாளை முதல் பதிவேற்றம் செய்யுமாறு தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சான்றிதழ் பதிவேற்றம்
தமிழகத்தில் கடந்த 2017-2018ம் ஆண்டிற்கான பாலிடெக்னிக் விரிவுரையாளர் 1060 பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து வகையான அரசு போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதன்பின் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வு கடந்த டிசம்பர் 8 முதல் 13ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்குரிய முடிவுகள் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் நாளை (மே 20) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதையடுத்து இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களின் கல்விச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால் சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக தேர்வர்களுக்கு பல்வேறு வகையான சந்தேகங்கள் எழுந்தது. அதனால் தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களை மின்னஞ்சல் மூலமாக தேர்வு வாரியத்திற்கு தெரிவித்தனர். அதன்படி தேர்வர்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Exams Daily Mobile App Download
அதன்படி தற்போது தேர்வர்களிடன் இருக்கும் மாற்றுச் சான்றிதழில் நன்னடத்தை குறிப்புடையவர்கள் தங்களின் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மற்றவர்கள் தாங்கள் படித்த கல்வி நிறுவனத்தில் நடத்தை சான்றிதழ் பெற வேண்டும் என்றும் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. எனவே நாளை முதல் (மே 20) ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை வருகிற 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.