தமிழகத்தில் நாளை (மே 10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(மே 10) நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் பொதுவாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெற்றால் மட்டுமே தமிழகத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படாமல் தொடர்ந்து தமிழக மக்களுக்கு மின்சாரம் கிடைத்து கொண்டே இருக்கும். மேலும் இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
தமிழகத்தில் ஷவர்மா கடைகளை மூட உத்தரவு – அமைச்சர் மா.சுப்ரமணியன் முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சி கோட்டை கமலகன்னியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை அமோகமாக நடைபெற உள்ளது. இதனால் தேர் சுற்றி வர உள்ள இடங்களில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள், செஞ்சி நகரில் மந்தை வெளி, திருவள்ளுவர் தெரு, திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலை, சத்திரத்தெரு, ராஜேந்திரா நகர், தேசூர் பாட்டை ஆகிய பகுதிகளிலும், என்.ஆர். பேட்டை, பொன்பத்தி, ஜெயங்கொண்டான் ஆகியவற்றை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.