தமிழகத்தில் ஷவர்மா கடைகளை மூட உத்தரவு – அமைச்சர் மா.சுப்ரமணியன் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொதுமக்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் சுகாதாரமற்ற சவர்மா கடைகளை மூடுமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
சவர்மா:
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு மேல்நாட்டு உணவான சவர்மாவை சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியான சம்பவம் நாட்டையே மிரள வைத்து விட்டது. மேலும் தேவானந்தா என்ற அந்த மாணவி காசர்கோட்டில் Ideal Food Point என்ற கடையில் ஷவர்மா சாப்பிட்டு, பலியானதை இப்போது வரை யாராலும் நம்ப முடியவில்லை. மேலும் அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஆகிய உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் அனைத்து சவர்மா கடைகளையும் மூடி விட்டனர். அதை தொடர்ந்து இந்த செயல் தமிழகத்திலும் நடந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் சவர்மா சாப்பிட்ட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான மதுரை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முக்கிய ஓட்டல்களில் சோதனை நடத்தி உள்ளனர்.
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – டிக்கெட் தொலைந்து விட்டால் இதை செய்தால் போதும்!
இந்த சவர்மா உணவானது, மேலைநாட்டு உணவு வகைகளில் ஒன்றாகும். மேலும் இந்த உணவானது அந்த நாட்டின் மக்களின் தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும். ஆனால் நம் நாட்டின் வெப்ப நிலைக்கு பொதுமக்கள் ஷவர்மா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் அனைத்து சவர்மா கடைகளிலும் மற்றும் கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனங்களிலும் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரம் இல்லாத சவர்மா கடைகளை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருப்பதாகவும், மேலும் இந்த சவர்மா உணவு நம் உணவு இல்லை என்றும் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள சுத்தம் இல்லாத சவர்மா கடைகள் விரைவில் மூடப்படும் என்று தெரிகிறது.