தமிழகத்தில் புதன்கிழமை (டிச.29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தேனி மாவட்டம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் 29.12.2021 அன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தவறாது நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் முடிவு பெறும் வரை மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் மற்றும் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகள் கண்டறிந்து அகற்றப்படுகிறது. மின் தடை செய்யப்படுவது குறித்து முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் ரத்து – ஓமிக்ரான் எதிரொலி!
இதனை அறிந்து மக்கள் வேலைகளை திட்டமிடுகின்றனர். பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதன் மூலம் முன் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு தடையின்றி மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது மின் கசிவு ஏற்படாவண்ணம் மின் பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை தேனி மாவட்டம் வீரபாண்டியில் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல் – அரசின் அதிரடி திட்டம்!
அதனால் டிசம்பர் 29 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வீரபாண்டி, போடேந்திரபுரம், உப்புக்கோட்டை, காமராஜபுரம், மாணிக்காபுரம், டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால் பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று தேனி மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சொ. லட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.