கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல் – அரசின் அதிரடி திட்டம்!
டெல்லியில் கோவிட் 19 நேர்மறை விகிதங்கள் 0.5% ஐத் தாண்டினால் அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்படும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனையை அரசு அதன் உயர் அதிகாரிகளுடன் நடத்தி வருகிறது.
கொரோனா பாதிப்புகள்:
டெல்லியில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 249 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளை விட இந்த எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்கள் காரணமாக டெல்லி மக்கள் அதிக அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனால் 7 நாட்களில் 1500 நோயாளிகள் அல்லது ஒரு வாரத்திற்குள் 500 நோயாளிகள் என்ற விகிதத்தில் ஆக்சிஜன் படுக்கையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு கணித்துள்ளது. இதனால் டெல்லி அரசு கட்டுப்பாடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடுவதற்கு உத்தரவிட வாய்ப்புள்ளது. ஏற்கனேவே காற்று மாசு காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்!
இந்நிலையில், கோவிட் 19 நேர்மறை விகிதங்கள் 0.5% ஐத் தாண்டினால் டெல்லி பள்ளிகள் மூடப்படும். கொரோனா தொற்று விகிதம், செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை அரசு முடிவு செய்யும். இருப்பினும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை டிசம்பர் 27, 2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு அதிகாரிகள் டெல்லி பெற்றோர்களுடன் ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடினர்.
நாளை மறுநாள் முதல் இரவு ஊரடங்கு அமல், புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!
அப்போது, பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அதிகம் மூடப்படுவது மாணவர்களின் கற்றல் செயல்முறைகள் பாதிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்த இறுதி முடிவை டெல்லி கல்வித்துறை விரைவில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் தற்போது அதிக நோய் தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருவதால், பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இருப்பினும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் டெல்லி பள்ளிகள் மீண்டும் திறக்கும் செய்திகள் பற்றிய அறிவிப்பை உடனடியாக தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.