தமிழக பள்ளி மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் ரத்து – ஓமிக்ரான் எதிரொலி!
தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி சுழற்சி முறை வகுப்புகளே தொடர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுழற்சி முறை வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மழை தனிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் தொடங்கியது. கடந்த கல்வியாண்டில் கொரோனா தாக்கத்தால் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜன.1 முதல் குடிநீர் கேன் விலை ரூ.10 வரை உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
கடந்த நாட்களில் அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜனவரி 3ம் தேதி முதல் சுழற்சி வகுப்புகள் இன்றி முழுமையாக செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் பரவி வரும் நிலையில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்தால் மாணவர்களுக்கு தொற்று அதிகரிக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் மீண்டும் நேரடி சுழற்சி முறை வகுப்புகளே தொடர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்!
தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இந்த நிலையில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்து தினசரி வகுப்புகளை தொடர்ந்தால் மேலும் தொற்று அதிகரிக்கும். அதனால் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பரவல் நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து முடிவெடுக்கும் என்று என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.