தமிழகத்தில் ஜன.1 முதல் குடிநீர் கேன் விலை ரூ.10 வரை உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை தொடர்ந்து குடிநீர் கேன் விலையும் அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலை உயர்வு
கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வந்ததால் பொதுமக்களிடம் நிதி நெருக்கடி உருவானது. இந்நிலையில் மற்றொரு அத்தியாவசிய பொருளான குடிநீர் கேன் விலை அதிகரிக்க உள்ளதாக செங்குன்றம் பகுதி குடிநீர் உற்பத்தியாளர்கள் விளம்பரம் மூலமாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதில் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் வருகிற புத்தாண்டு முதல் தண்ணீர் கேன் விலை உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல் – அரசின் அதிரடி திட்டம்!
அத்துடன் 300, 500 மில்லி, 2 மற்றும் 5 லிட்டர் கேன் பெட்டிகளின் விலை தலா 10 ரூபாய் உயர்த்த உள்ளதாகவும் 20 லிட்டர் கேன்களின் விலை 2 ரூபாயும் உயர்த்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சென்னை பெருநகர வாசிகள் தான். ஏனெனில் சென்னையில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும் அங்குள்ள பலர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனை விலைக்கு வாங்கி அதனை குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் கேன் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது இவர்களுக்கு பேரிடியாக உள்ளது.
நாளை மறுநாள் முதல் இரவு ஊரடங்கு அமல், புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெறாமல் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் பல இயங்கி வருகின்றனர். அதனால் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. அதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் பல்வேறு ஆலைகள் ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெறாமல் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த ஆலைகளுக்கு அரசு சீல் வைத்துள்ளது. ஆனாலும் முறைகேடாக பல ஆலைகள் இயங்கி வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் கேன் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.