ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்!
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ளது.
ஏடிஎம்:
2022ம் ஆண்டு வரவுள்ள நிலையில் வங்கிகள் புதிய கடன் திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் வட்டி விகிதங்களிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இந்த குறைக்கப்பட்ட வட்டி முறை டிசம்பர் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் 2022ம் ஆண்டுக்கான புதிய வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் போன்றவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஏடிஎம் பண பரிவர்த்தனை முறைகளிழும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
நாளை மறுநாள் முதல் இரவு ஊரடங்கு அமல், புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் வங்கி கணக்கு வைத்திருப்போர் பெரும்பாலும் வங்கிகளுக்கு செல்வதை தவித்து அந்தந்த வங்கி ஏடிஎம் அல்லது பிற ஏடிஎம்களிலும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வர். அதிலும் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் வங்கிகள் ஆன்லைன் மூலம் சேவை அளித்து வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மற்றும் இணையதளம் வாயிலாக மட்டுமே பணம் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் ஏடிஎம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு வைத்து ஐந்து முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் அதற்கு மேல் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
மாவட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – நாளை கடைசி நாள்!
அதனை தொடர்ந்து மெட்ரோ நகரங்களில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஒரு முறை பண பரிவர்த்தனை ஏடிஎம் கட்டணமாக 21 ரூபாய் வசூலிக்கப்படும் புதிய விதிமுறை வரும் 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது ஒவ்வொரு முறையும் கார்டு எண் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் பதிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.