தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உடுமலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மின்தடை:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனை தொடர்ந்து மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
அக்.19ம் தேதிக்கு பின்னர் மாநிலத்தில் மின்தடை இருக்கும் – அமைச்சர் தகவல்!
கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை உடுமலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மின் பராமரிப்பு பணியாளர்களின் நலனுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் 8 முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? அரசுக்கு வலியுறுத்தல்!
உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலூர், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொடிநாயக்கனூர், சோமவாரபட்டி, ஆர்.பி.நகர், பெதப்பம்பட்டி, மாலகோவில், ஆலாமரத்தூர், மேலும் இலுப்பநகரம், மரிக்கந்தை, வல்லக்குண்டாபுரம், ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், காந்தி நகர்-2, சிந்து நகர், ராம் நகர், ஜீவா நகர், ராமசாமி நகர், அரசு கலைக்கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.