அக்.19ம் தேதிக்கு பின்னர் மாநிலத்தில் மின்தடை இருக்கும் – அமைச்சர் தகவல்!
நாடு முழுவதும் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதனால் கேரளா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதிக்கு மேல் மின்தடை ஏற்படும் என அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.
மின்தடை அறிவிப்பு
இந்தியா முழுவதும் தற்போது இருப்பில் இருக்கும் நிலக்கரி தீர்ந்து போனதும் இனி வரும் நாட்களில் மின்தடை ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள மொத்த மின் உற்பத்தி நிலையங்களில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் குஜராத், ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் நாட்களில் மின்தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை முக்கிய அறிவிப்பு – காவலன் ஆப் அவசர எண்கள் வெளியீடு!
இந்நிலையில் வரும் அக்டோபர் 19ம் தேதிக்கு மேல் கேரளாவில் மின்தடை ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறுகையில், ‘கேரளாவில் தற்போது மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது மின்சார தேவை மற்றும் விநியோகத்துக்கு இடையில் ஏற்பட்டுள்ள இடத்தை நிரப்பவும் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கவும் திட்டமிட்டுள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் 8 முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? அரசுக்கு வலியுறுத்தல்!
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மின்சாரத்துறை அமைச்சர் RK சிங், நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தேசிய அனல் மின் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர மாற்று எரிசக்தி மூலம் மின் உற்பத்தி பற்றாக்குறையை சரிசெய்ய முடியும் என நிலக்கரி சுரங்கத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.