தமிழகத்தில் செப்.21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாளை (21.09.2021) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையில் அரசு முக்கிய சிறப்பம்சங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது மக்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு அரசு மின் பயனாளர்களுக்கு முக்கிய சலுகைகளை அறிவித்தது. அதை பயன்படுத்தி மக்கள் மின் கட்டணத்தை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் செலுத்தினர்.
Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – அதிரடி ரீசார்ஜ் ஆபர்கள் இதோ!
அதனை தொடர்ந்து மின் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய மின் புகார் மையம் அமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாதந்தோறும் அனைத்து பகுதிகளிலும் உள்ள துணை நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் மற்றும் சிவகாசி போன்ற பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நாளை (21.09.2021) மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருமணங்களில் 100 பேர் கலந்து கொள்ள அனுமதி – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அதனால் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், புங்கலூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துகுடி திருப்புங்கள், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூர், எருக்கூர, மாதிறிவேளுர் வடரங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம் , ஆணைகாரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார் புதுப்பட்டிணம், மாதாமை , பழையபாளையம், மாங்கணாம்பட்டு, ஆச்சாள்புரம், அரசூர், திருவெண்காடு, நாஙகூர், மணிகிராமம், திருநகிரி, மேலையூர், பொறையார் தில்லையாடி, திருக்கடையூர், தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், சாத்தலுர், கிடாரங்கொண்டான, செம்பணர்கோவில், ஆக்கள், பூம்பூகார் மற்றும் திருவாலி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.