திருப்பூரில் செப்.18ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் குமார் நகர் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (18.09.2021) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மின்சாரத் துறையில் முழு கவனம் செலுத்தி வருகிறது. நடந்த சட்டமன்ற தேர்தலின் போது மின் கட்டணம் மாதந்தோறும் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்தார். விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மின் பயனாளர்களுக்கு மின் கட்டணம் செலுத்த பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரத்துறை சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுவினர் வீடு கட்ட 35,000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து மாதந்தோறும் தமிழகம் முழுவதும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (18.09.2021) திருப்பூர் மாவட்டம் குமார் நகர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி .,நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்ட புரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைவு – இன்றைய நிலவரம்!!
மேலும் வ.உ.சி.நகர், டி.எஸ்.ஆர். லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ் புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள் ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம், லட்சுமி நகர் பகுதிகளிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய வட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.