தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 21ம் தேதி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருபதால் மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் சரியாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து திமுக தலைமையிலான அரசு மின் தொடர்பான பணிகளில் தனி கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆட்சியில் மின்சாரத்துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது. மாதந்தோறும் முன் அறிவிப்புடன் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த முன் அறிவிப்பினால் மின் பயனாளர்கள் அதற்கேற்றவாறு தங்கள் பணிகளை முடித்து விடுகின்றனர்.
சென்னை: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மூலமாக பாதுகாப்பான மின்சாரம் மின் பயனாளர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அக்டோபர் 21ம் தேதி மதுரை மாவட்ட வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி அய்யங்கோட்டை துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, சி.புதூர், குட்டிக்கரடி, பூச்சம்பட்டி, திருமால் நத்தம், ஆண்டிபட்டி, நகரி, குட்லாடம்பட்டி, வடுகப்பட்டி, விராலிப்பட்டி, ராமையன்பட்டி, சமத்துவபுரம், ராயபுரம், பெருமாள்பட்டி, மேலசின்னம்பட்டி, நாராயணபுரம், நெடுங்குளம், ரமாகவுண்டன்பட்டி, தனிச்சியம், எல்லையூர், ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி எந்தெந்த வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!
மேலும் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள மின் பாதையில் இடையூறாக உள்ள மரங்களின் கிளைகள் வெட்டி அவற்றை அகற்றும் பணிகள் நடைபெறுவதால் அக்டோபர் 21 வியாழக்கிழமை அன்று அண்ணா நகர் கிழக்கு, குருவிக்காரன் சாலை, காமராஜர் தெரு, ஆலமரம் பேருந்து நிறுத்தம், முதலியார் காலனி, எஸ் எம்.பி காலனி, ஜக்கா தோப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மதுரை பெருநகர செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.