தமிழகத்தில் நாளை (மார்ச் 19) மின்தடை ஏற்பட உள்ள முக்கிய பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (மார்ச்.19) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் விபத்துகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் விபத்துகள் ஏற்படுவது குறைகிறது. ஆனால் இந்த பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. மேலும் இதனை அரசு முறையாக அறிவித்து அதன்பின் செயல்படுத்துகிறது.
Ola S1 Pro Electric ஸ்கூட்டரின் விலை திடீர் உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிருப்தி!
இதனை தொடர்ந்து நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான கிளியனூர், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மயிலாடுதுறை நகரம், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார் அறிவித்துள்ளார்.
இதே போல சீர்காழியில் உள்ள திருக்கடையூர், ஆக்கூர், பூம்புகார், திருவாலி, தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், சாத்தனூர், கிடாரம்கொண்டான், செம்பனார்கோவில், தென்பாதி, வைத்தீஸ்வரன்கோவில், திருப்புங்கூர், திருவெண்காடு, நாங்கூர், மணிக்கிராமம், திருநகரி, மேலையூர், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, பொறையாறு, தில்லையாடி உள்ளிட்ட இடங்களிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (மார்ச்.19) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொறையார் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான மாணிக்கப்பங்கு, பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, என்.என்.சாவடி, இதனா, திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, கிள்ளியூர். டி.மணல்மேடு, மாத்தூர், பொறையார், தரங்கம்பாடி, சந்திரபாடி, திருக்கடையூர், வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, கண்ணாப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருவிடைக்கழி, விசலூர், எடுத்துக்கட்டி சாத்தனூர், கண்ணங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வருகிற சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாக கிடாரங்கொண்டா, மேமாத்தூரில் துணை மின்நிலையங்களில் மின்சாரம் பெறும் பகுதிகளான கருவாழக்கரை, காளகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, மாமாகுடி, சின்னங்குடி, சின்னமேடு, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவி, செம்பதனிருப்பு, மேமாத்தூர், கடலி, நரசிங்கநத்தம், ஆறுபாதி, பரசலூர், கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், ஆக்கூர், ஆக்கூர் முக்கூட்டுரோடு, அன்னப்பன்பேட்டை, மடப்புரம், மேலப்பாதி, கீழையூர், கீழ்மாத்தூர், நல்லுச்சேரி, மேலகட்டளை, திருவெண்காடு, வானகிரி, பூம்புகார், மங்கைமடம், நாங்கூர், அண்ணன் பெருமாள் கோவில், மேலச்சாலை, திருநகரி, மணிக்கிராமம் உள்ளிட்ட பகுதிளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.