தமிழகத்தில் நாளை (டிச.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக மதுரையில் உள்ள தனியாமங்கலம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச.24) அன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகிறது. ஆதலால் தமிழக அரசு இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் மேற்கொள்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படுவது குறைகிறது.
இன்று முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!
அதனால் மின் வாரியம் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை முறையாக சரி செய்ய மின்தடை அறிவிப்பை வெளியிடுகிறது. அதன் காரணமாக மதுரையில் உள்ள தனியாமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.24) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச பயிற்சி வகுப்புகள்!
அதனை தொடர்ந்து தனியாமங்கலம் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெற்று பயன்பெறும் பகுதிகளான தனியாமங்கலம், கீழையூா், கீழவளவு, இ.மலம்பட்டி, கொங்கம்பட்டி, கரையிப்பட்டி, முத்துச்சாமிபட்டி, செம்மினிபட்டி, முத்துச்சாமிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, சாத்தமங்கலம், வெள்ளலூா், வெள்ளநாயகம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, வெள்ளூா், கோட்டநத்தம்பட்டி மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளர் மு.ராஜா காந்தி அவர்கள் அறிவித்துள்ளார்.