தமிழகத்தில் TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச பயிற்சி வகுப்புகள்!
தமிழகத்தில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலவச பயிற்சி:
தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யபட்டது வருகிறது. இத்தகைய போட்டித் தேர்வுகளுக்கு பெரும்பாலானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதாவது சிலர் கட்டணம் செலுத்தி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். அவ்வாறு கட்டணம் செலுத்தி படிக்க முடியாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
கடந்த 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா தொற்றின் காரணமாக நடைபெறாத தேர்வுகள் குறித்து தற்போது படிப்படியாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் TNPSC மற்றும் TRB போட்டித் தேர்வுகளுக்கு திருச்சி மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் – மாநில அரசின் அதிரடி உத்தரவு!
இந்த வகுப்பானது திருச்சி மைய நூலகத்தில் கடந்த டிச.20ம் தேதி தொடங்கியுள்ளதாகவும், தற்போது உயிரியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி மைய ஆசிரியர் ஆர்.கெளதம் அவர்களால் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலக்கண பயிற்சி வகுப்புகள் வரும் டிச.26ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை நூலகத்திற்கு நேரிலோ அல்லது 0431-2702242, 7598093923 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்யலாம்.