தமிழகத்தில் டிச.29, 30 ஆகிய தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக கல்லல் பகுதியில் நாளை (டிச.29), ஆறாவயல், தானாவயல் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (டிச.30) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாகவும் மின்தடை ஏற்படுகிறது. ஆதலால் தமிழக அரசு இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதை தடுக்க மின்தடை அறிவிப்பை பல்வேறு பகுதிகளில் அறிவித்து வருகிறது.
ஜனவரி 1 முதல் 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (டிச.29) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான கல்லல், செவரக்கோட்டை, சாத்தரசன்பட்டி, வெற்றியூா், அரண்மனை சிறுவயல், செம்பனூா், பாகனேரி, கண்டிப்பட்டி மற்றும் கண்டரமாணிக்கம் பிரிவில் பட்டமங்கலம், சொக்கநாதபுரம், ஆலங்குடி மற்றும் கூத்தலூா் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளர் பி. ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆணையர் முக்கிய உத்தரவு!
அடுத்ததாக அமராவதிபுதூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற டிசம்பர் 30ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாலயன்கோட்டை, எஸ்.ஆா்.பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வளாகம் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.