ஜனவரி 1 முதல் 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
குளிர்கால விடுமுறையைக் கருத்தில் கொண்டு டெல்லி பள்ளிகள் ஜனவரி 1 முதல் ஜனவரி 15, 2022 வரை மூடப்படும். இந்த நாட்களில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு முழுவதுமாக ஆன்லைன் வழியில் மட்டுமே கற்பித்தல் பணிகள் தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மாநில அரசுகள் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பாதிப்பு குறைந்த மாநிலங்கள் வாரியாக கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளும் முறையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது.
ஜனவரி மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்நிலையில், காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லியில் 6 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளின் மாணவர்களுக்கு பள்ளிகள் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மூடப்பட்டு டிசம்பர் 18, 2021 அன்று மீண்டும் திறக்கப்பட்டன. எனவே வகுப்புகள் தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டிசம்பர் 27ம் தேதி முதல் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் டெல்லி பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் ஜனவரி 15, 2022 வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
டெல்லி கல்வி இயக்குநரகத்தால் டெல்லி அரசுப் பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்படும் என்றும் இந்த நாட்களில் மாநிலத்தில் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்பட கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி முழுவதும் கொரோனா தொற்றின் ஓமைக்ரான் வகை பரவல் அதிகரித்து வருவதால் அதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்படவும், பரிசோதனைகள் அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்று அதிகரிப்பதால் மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.