தமிழகத்தில் நாளை (அக்.13) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு – மின்வாரியம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தேவனூர் புதூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (13.10.2021) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மின்சாரத் துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் மின் தொடர்பான புகார்கள் தற்போது 2 நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த படி, மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாதந்தோறும் மாவட்டம் வாரியாக உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மே 1 தொழிலாளர் தின விடுமுறை ரத்து? மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்!
அந்தந்த பகுதியை சேர்ந்த மின் ஊழியர்கள் மூலம் பணிகள் நடைபெறுகிறது. மின் பராமரிப்பு நேரத்தில் மின்தடை தேதியையும், நேரத்தையும் அந்த பகுதியின் செயற்பொறியாளர் முன்னதாகவே அறிவித்து வருகின்றனர். மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் மின் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு தடையின்றி மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மின் ஊழியர்கள் துணை மின் நிலையங்களில் ஆய்வு செய்து மின் இணைப்புகளை சரி பார்க்கின்றனர்.
2 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!
மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் செல்லம் பாளையம், கரையாம் பாளையம், பொன்னாண்ட, கவுண்டனூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.