2 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!

0
2 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு!
2 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு!
2 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள், மால்கள், தியேட்டர்கள் மற்றும் கோயில்கள் என அனைத்து இடங்களும் திறக்கப்பட்டு சரியான முறையில் இயங்கி வருகின்றது. கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. பிற நோய்வாய்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தாமல் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து வரும் நவம்பர் 1ம் தேதி அன்று தொடக்கப் பள்ளிகள் திறப்பதாக அறிவிப்பு வெளியாகியது. இத்தகைய அறிவிப்பு இதுவரையில் நம்ப முடியாத நிலையிலேயே இருந்தது. மேலும் பல்வேறு தரப்பினர் பள்ளிகள் திறப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

PF பயனர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் தொகை விரைவில் செலுத்தப்படும்! EPFO அறிவிப்பு!

அதிலும் சிலர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சிறு குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு மாஸ்க் அணிவது முடியாத செயல் என்றும் தெரிவித்தனர். அப்போது மத்திய அரசு கூடிய விரைவில் 2 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த தடுப்பூசி திட்டத்திற்காக நிபுணர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருந்துகளை ஆய்வு செய்யக்கூடிய ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இத்தகைய குழு தலைமையில் 2 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது பற்றி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு – சிறப்பு சேவை அறிமுகம்!

அத்தகைய ஆய்வின் முடிவாக 2 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய அறிக்கையை மருந்துகள் தர சரிபார்ப்பு அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அவர்கள் அதனை ஆய்வு செய்து அதாவது இத்தகைய தடுப்பூசி செலுத்துவதால் பக்க விளைவுகள் ஏதும் நிகழாது என்பதை சரிபார்த்த பின்னர் ICMR க்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே நடப்பு அல்லது அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணி தொடங்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!