மே 1 தொழிலாளர் தின விடுமுறை ரத்து? மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்!
இந்தியாவில் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் மே 1 அரசு விடுமுறையை 2022-ம் ஆண்டுக்கான பட்டியலில் இருந்து புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தொழிலாளர் தின விடுமுறை:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதி உழைக்கும் மக்களின் நாளாக, சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. எப்போதும் ஓய்வின்றி உழைக்கும் மக்களின் ஓய்வுக்காக மே 1 விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 1ம் தேதி அனைத்து தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும். மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு தொழிலாளர்களுக்கென ஒரு தினம் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு ரத்து? கொரோனா எதிரொலி!
முதலில் உலகம் முழுவதும் 12 முதல் 18 மணி நேரம் வேலை கட்டாயமாக இருந்தது. இதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றது. பலரின் தியாகங்களுக்கு பிறகு இன்று நாம் அனைவரும் தினசரி 8 மணி நேரம் வேலை செய்கிறோம். இந்த நிலையில் மே 1 அரசு விடுமுறையை 2022-ம் ஆண்டுக்கான பட்டியலில் இருந்து புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது. ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
2 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!
அதேபோல் 2022ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை வெளியிட்டிருந்தது. இதில் மே 1 தொழிலாளர் தின விடுமுறை நீக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி புதுவை ஏஐடியூசி செயலாளர் சிவக்குமார் மத்திய உள்துறைச் செயலர், ஆளுநர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் புதுவை அரசு விடுமுறை பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி விடுமுறை அளிக்கவில்லை. புதுவை அரசின் இச்செயலை தொழிற்சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.