தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு ரத்து? கொரோனா எதிரொலி!
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வந்தது. அதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
2 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்தது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற முடியாத சூழல் இல்லாத காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்படும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் அடுத்து வரும் 2 மாதங்களும் பல்வேறு பண்டிகைகள் அனுசரிக்கப்படவுள்ளது.
PF பயனர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் தொகை விரைவில் செலுத்தப்படும்! EPFO அறிவிப்பு!
இந்நிலையில் பொதுமக்கள் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் எனவும், தீபாவளியை தொடர்ந்து வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளில் பேருந்து நிலையங்களிலும், வணிக பகுதிகளிலும் ஏராளமான கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது இடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.