தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சில நேரங்களில் தெருக்களில் வளர்ந்துள்ள உயரமான மரங்கள் மின் பாதைகளுக்கு அதாவது வயர்களுக்கு இடையூறாக அமையும். அதனால் அவைகள் அகற்றபட்டு சரி செய்யும் பணிகள் நடைபெறும்.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் வினாவங்கி!
இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறார். இதனை அறிந்து மின் பயனர்கள் மின் தொடர்பான வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். மற்ற பகுதிகளை நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் காரை, சிறுவாக்கம், எடையார்பாக்கம், பட்டுமுடையாா் குப்பம், துளசாபுரம், கூத்திரம்பாக்கம், வரதாபுரம், தண்டலம், ஏகனாபுரம், கண்டிவாக்கம், கோட்டூர், பிச்சிவாக்கம், செல்லம்பட்டிடை, நெல்வாய், மேல்பொடவூா், வேடல், ஆண்டி சிறுவள்ளூர், கொட்டவாக்கம், பரந்தூா் ஆகிய இடங்களுக்கும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.