தமிழகத்தில் நாளை (மே 23) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் உள்ள தொண்டமாநத்தம் மின்பாதையில் நாளை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் துணை மின் நிலையம் மற்றும் மின் பாதைகளில் ஏதேனும் மின்கசிவு ஏற்பட்டுள்ளதா எனவும், மின் பாதைகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா எனவும் சரிபார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு மின்பாதைகளில் மின் கசிவு மற்றும் பழுது ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாரளித்துள்ளன.
நாளை (மே 23) அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை – முக்கிய உத்தரவு!
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்பாதை மற்றும் துணை மின் நிலையங்களில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களின் சௌகரியத்திற்காக மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள தொண்டமாநத்தம் மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கொனேரிக்குப்பம், உளவாய்க்கால், சேத்தநத்தம்பேட், வள்ளுவனர்பேட், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.