மதுரையில் நாளை (ஆகஸ்ட் 10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 10) மதுரையில் எல்லீஸ் நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை முறையாக சரி செய்து பராமரிக்கப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் நாளை மதுரையில் உள்ள எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை இந்த துணை மின் நிலையத்தால் பயன்பெறும் பகுதிகளான கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள், டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பிஹோம் 1 மற்றும் 2வது தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 10) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி துறையில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
மேலும், எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தால் பயன்பெறும் பகுதிகளான, எல்லீஸ்நகர் மெயின்ரோடு, ஹவுசிங்போர்டு, குடிசை மாற்று வாரிய வீடுகள், போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, எஸ்.டி.சி.ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள்புரம், அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுந்தரா அபார்ட்மெண்ட்ஸ்,பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்கா தோப்பு, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை (ஆகஸ்ட் 10) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.