மதுரையில் நாளை (ஜூன் 2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் நாளை வியாழக்கிழமை அன்று உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மதியம் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மின்தடை:
சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின் தட்டுப்பாடு தான் காரணம் என்றும் அதனை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் அப்பணிகள் மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது. இவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்படுகையில் அந்தந்த மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனவும் முன்னதாகவே மின்வாரியம் மூலம் தகவல் வெளியாகும்.
மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்:
மேற்குறிப்பிட்ட படி நாளை மதுரை மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மதுரை பைபாஸ் ரோடு, வானமாமலை நகர், வேல்முருகன் நகர், துரைச்சாமி நகர், ராம்நகர், சிருங்கேரி நகர், சத்யமூர்த்தி நகர், வ.உ.சி., தெரு, நேரு நகர், போடி லைன், கிரீன் லீவ்ஸ் குடியிருப்பு, ஜெய் நகர், தானத்தவம் ரோடு, மீனாட்சி நகர், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், எம்.எம். நகர்.சம்பகுளம், 120 அடி ரோடு, சர்வேயர் காலனி, கொடிக்குளம், கணேஷ் நகர், மகாத்மா பள்ளி, பாரத் நகர், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட், நெல் வணிக வளாகம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, டி.எம்.நகர், டி.டி.சி., நகர், விஷ்வவாணி குடியிருப்பு, லேக் ஏரியா, குரு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.
பள்ளி மாணவர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஜூன் 30 வரை கோடை விடுமுறை! அரசு அறிவிப்பு!
பெரியார் பஸ் ஸ்டாண்ட், டி.பி.கே., ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில் தெரு, மேலவடம் போக்கி தெரு, ஹயாத்கான் ரோடு, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மரக்கடை, ஹீரா நகர், திடீர் நகர், பந்தடி 1,2 தெரு, மகால் 3 – 7 தெரு, பால் மால் குறுக்கு தெரு, தெற்குமாசி வீதி, மஞ்சணக்கார தெரு, மகால் பகுதி, பேலஸ் ரோடு, விளக்குத்துாண், நவபாத்கானா தெரு, பத்து துாண், பந்தடி 1 — 7 தெரு ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையில் நாளை ஜூன் 2ந் தேதி அன்று மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.