பள்ளி மாணவர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஜூன் 30 வரை கோடை விடுமுறை! அரசு அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை உள்ள 30 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், ஜூலை 1ஆம் தேதி வழக்கம்போல அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு ஆண்டுகளும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதன் பின்பு ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததுமே மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாகவே ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்ட காரணத்தினால் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது மற்றும் பாடத்திட்டங்களும் முறையாக நடத்தாத காரணத்தினால் 35% வரைக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாடங்களிலிருந்து கேள்விகள் எதுவும் பொதுத்தேர்வில் வினாக்களாக கேட்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் எந்தவித அச்சமுமின்றி தேர்வு எழுதினர். மேலும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்படைந்த காரணத்தினால் அதனை ஈடுகட்ட பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையும் குறைக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் மே 13 ஆம் தேதியிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி வரை உள்ள 30 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பள்ளிகள் திறந்த நாளிலிருந்தே அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் நடைபெற்றது. இதனால் இந்த கல்வியாண்டில் இருந்து அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஹரியானா மாநிலத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை உள்ள 30 நாட்களுக்கு கோடை விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் எனவும், காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பள்ளி இயங்கும் எனவும் பள்ளி நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.