மதுரையில் நாளை (ஜன.12) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் ஆனையூா், மேலவளவு, திருவாதவூா் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஜன. 12) சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்த வகையில் மின் கம்பங்களில் ஏற்படும் மின் கசிவு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. இவ்விதமான விபத்துக்களை தவிர்ப்பதற்கு மின்வாரியம் அதிக கவனம் செலுத்தி இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணி நடைபெறும் போது சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். இந்த மின்தடை குறித்து முன்னதாகவே மின் செயற்பொறியாளா்க்கு அறிவிக்கப்படும்
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பூஸ்டர் கொரோனா தடுப்பூசி!
இந்த வகையில் ஆனையூா், மேலவளவு, திருவாதவூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 12) நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனையூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜன. 12) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை தினமணி நகா், கரிசல் குளம், பழைய மற்றும் புது விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகா், ஐஓசி நகர், விஎம்டபிள்யு காலனி, ரயிலாா் நகர், சங்கீத் நகர், சொக்கலிங்க நகா், கூடல்நகா், அகில இந்திய வானொலி நிலையம், செல்லையா நகர், ஆனையூா் செக்டாா் 1, 2, சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை படும் என அரசரடி மின் செயற்பொறியாளா் ஓ.கே. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி வரை சேவல் சண்டை நடத்த தடை – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இதனை தொடர்ந்து மேலவளவு, திருவாதவூர் பகுதிகளில், நரசிங்கம்பட்டி, திருவாதவூர், அ. வல்லாளபட்டி மற்றும் மேலவளவு துணை மின்நிலையங்களில் (ஜன. 12) நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூா், கட்டையன்பட்டி, திருவாதவூா், ஆமூா், தரமதானப்பட்டி, இடையபட்டி, கொட்டகுடி, அரிட்டாபட்டி, ஆ. வல்லாளபட்டி, எட்டிமங்கலம், மேலவளவு, பட்டூா், கேசம்பட்டி, ஆலம்பட்டி, சேக்கிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மதுரை கிழக்கு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் மு. ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.