மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பூஸ்டர் கொரோனா தடுப்பூசி!
அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களும் முன்களப் பணியாளர்களாக கருதப்பட்டு இந்நடவடிக்கை ஈடுபட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி:
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது. தற்போதைக்கு தடுப்பூசிகள் மட்டுமே பாதிப்பில் இருந்து நம்மை காக்கும் என்பதால் பொது மக்கள் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தும் பணியானது அனைத்து மாநிலங்களிலும் விரைவாக நடைபெற்று வருகிறது. முதலில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17ம் தேதிக்கு மாற்றம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் முதல் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டால் இந்தியாவில் கடந்த வருடம் பரவிய இரண்டாம் அலை கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் வந்தாலும் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும், உயிரிழப்பில் இருந்து காக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதனால் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசிகளை தொடர்ந்து தற்போது 3ம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி வரை சேவல் சண்டை நடத்த தடை – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தபடுகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களும் முன்கள பணியாளராக கருதப்பட்டு அவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படியில் 3ம் தவணையாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு துறை ஊழியர்களும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதனால் இவர்களில் தகுதி வாய்ந்த அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.