தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி வரை சேவல் சண்டை நடத்த தடை – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு ஜனவரி 25 ஆம் தேதி வரை தடை என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேவல் சண்டை தடை:
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், முதல்வர் அவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்க்கு முக்கிய அறிவிப்பு!
இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்த வகையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜனவரி 25-ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் எவ்வாறு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..? என கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா, மீண்டும் ஊரடங்கு? முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!
இதை தொடர்ந்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வகையில் தேனி உத்தமபாளையம் பகுதியில் ஜனவரி 17ம் தேதி சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. சேவல் சண்டை நடக்கும் போது, சேவல் கால்களில் பிளேடு, கத்தி போன்றவற்றை கட்டக்கூடாது என்று நீதிபதி சுவாமிநாதன் அறிவுரை வழங்கியிருந்தார்.