அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17ம் தேதிக்கு மாற்றம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17ம் தேதிக்கு மாற்றம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17ம் தேதிக்கு மாற்றம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17ம் தேதிக்கு மாற்றம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் அதாவது வரும் ஜன.14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இத்தகைய ஓமைக்ரான் வகை பெருந்தொற்றை தொடர்ந்து கொரோனா தொற்றும் வேகமெடுத்து பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி வரை சேவல் சண்டை நடத்த தடை – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதற்கு முன்பு தமிழகத்தில் 100 என்ற எண்ணிக்கையில் இருந்த தினசரி பாதிப்பு தற்போது ஆயிரக்கணக்கில் பதிவாகி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தினசரி நாட்களில் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி தமிழக அரசு கடந்த ஜன.5ம் தேதி அறிவித்துள்ளது. இதுவரை தினசரி இரவுநேர ஊரடங்கு அமலிலும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி வரை சேவல் சண்டை நடத்த தடை – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதற்கிடையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடத்தப்படும் உலகப்புகழ் பெற்ற பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜன.16ம் தேதி நடைபெற இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஜன.17ம் தேதி நடத்தப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏனெனில் ஜன.16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா? மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், உதவியாளர் இவர்களுக்கு தனி சான்று தேவைப்படுமா? என்ற பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!