திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் நாளை (மார்ச் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை பெற இருப்பதாக மின் வாரியத்தின் சார்பில் தெரிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பியில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்தும் தேவை இல்லாத மரங்களை நீக்குவதற்காகவும் பராமரிப்பு பணிகள் மின் வாரியம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவ்வாறு பணிகளை மேற்கொள்ளும் போது மாவட்டங்களில் உள்ள துணை மின்நிலையகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்தடை காலை 9 மணி முதல் 5 மணி வரை இருக்கும். இந்த மின்தடை ஆனது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட பகுதிகளுக்கும் ஒரு முறை செயல்படுத்தி வருகிறது.
TNPSC தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தமிழ்வழி சான்றிதழ் அவசியம்! தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு!
இந்த நிலையில் நாளை (மார்ச் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று பழனி மின்வாரிய செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்து உள்ளார்.
CSK வீரர் ராபின் உத்தப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, மற்றும் சின்னக்கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப் படும் என்று அறிவித்து உள்ளனர்.