மின்தடை அறிவிப்பு.. உங்க Area இருக்கா – மின்வாரியம் வெளியிட்ட லேட்டஸ்ட் நியூஸ்!

0
மின்தடை அறிவிப்பு.. உங்க Area இருக்கா - மின்வாரியம் வெளியிட்ட லேட்டஸ்ட் நியூஸ்!
மின்தடை அறிவிப்பு.. உங்க Area இருக்கா - மின்வாரியம் வெளியிட்ட லேட்டஸ்ட் நியூஸ்!
மின்தடை அறிவிப்பு.. உங்க Area இருக்கா – மின்வாரியம் வெளியிட்ட லேட்டஸ்ட் நியூஸ்!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகள் அனைத்தும் மாதந்தோறும் சரி செய்ய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (அக்.15) கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை என விரிவாக பார்ப்போம்.

மின்தடை

தமிழகத்தில் மின் விபத்துகளை தடுப்பதற்காக துணை மின் நிலையத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டு வருவதால் சாலையோரங்கள் மின் கம்பங்கள் விழுந்துள்ளன. இதையடுத்து மின் இணைப்பு கம்பிகளில் பிளவு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. இதனை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்த பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு வழக்கம் போல மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை கரூர் கோட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம் துணை மின்நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியியலாளர் அறிவித்துள்ளார். அதனால் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பராமரிப்பு முடிவடையும் வரை தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்த தடை? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து மண்மங்கலம் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, வெங்கமேடு, மண்மங்கலம், ஏவிபி நகர், சின்னவடுகப்பட்டி, துளிப்பட்டி, காமராஜ் நகர், காளிபாளையம், திட்டச்சாலை மெயின்ரோடு, நேரு நகர், வெங்கமேடு சேலம் மெயின்ரோடு, சிவியம்பாளையம், காதப்பாறை, சின்னவ ரப்பாளையம், பேங்க் காலணி, பெரியவரப்பாளையம், வெண்ணைய்மலை பசுபதிபாளையம், வெண்ணைய்மலை, கோதூர், பெரியவடுகப்பட்டி, வள்ளிப்பாளையம், பண்டுதகாரன்புதுர், நாவல் நகர், செம்மடை, மண் ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!