தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்த தடை? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்த தடை? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்த தடை? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்த தடை? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வானது அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தற்போது இந்த மின் கட்டண உயர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை பற்றி பார்ப்போம்.

மின் கட்டண உயர்வு:

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஒழுங்குமுறை ஆணையம் ஆனது பொது மக்களிடம் கருத்து கேட்ட பிறகு மின் கட்டண உயர்வானது அமல்படுத்தப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடம் காலியாக உள்ளது. இதில் தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இருக்க வேண்டும். அதனால் சட்டத்துறை உறுப்பினர் இல்லாத போது மின் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்க மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்று கொண்டு ஒப்புதல் அளித்தது. அதன்படி புதிய மின் கட்டணம் உயர்வு கடந்த மாதம் அமலுக்கு வந்தது. அதன்படி மின் கட்டண உயர்வு ரூ.55 முதல் ரூ.1,130 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் மின்சாரம் வழக்கம் போல இலவசமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மின் கட்டண உயர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

உண்மையான தீபாவளி அரசு ஊழியர்களுக்கு தான்.. அடுத்தடுத்து வெளியாகும் குட் நியூஸ் – பம்பர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே சமயம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரி பணியிடம் காலியாக இருப்பதால் 3 மாத காலத்திற்குள் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 3 மாதத்திற்கும் மேல் சட்டத்துறை அதிகாரியை தமிழக அரசு நியமிக்கவில்லையெனில் மீண்டும் வழக்கு தொடரலாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!