தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 6) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை ஆகஸ்ட் 6 அன்று சூலக்கரை பகுதிகளில் மின் நிறுத்தம் செய்ய போவதாக மாவட்ட செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் மேலும் படியுங்கள்.
மின்தடை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். ஏனெனில் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் விபத்துகள் நேரிட அதிகளவு வாய்ப்பு உள்ளது. இதனால் பல உயிர் சேதங்களும் ஏற்படும். அவற்றை தவிர்ப்பதற்காகவே முக்கியமாக இந்த மின் பராமரிப்பு பணிகள் தவறாது ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
சபரிமலை செல்வோர் கவனத்திற்கு – ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை விடுப்பு!
அவ்விதமாக நாளை சனிக்கிழமை (ஆக.6) அன்று சூலக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா். ஏனெனில் பராமரிப்பு பணியின் போது பகுதி மக்களுக்கோ அல்லது பணியை மேற்கொள்ளவிருக்கும் ஊழியருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
இது குறித்து செயற்பொறியாளர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சூலக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (ஆக. 6) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை சூலக்கரை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், காவலர் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாா்டன் நகா், மாத்த நாயக்கன்பட்டி, குல்லூர் சந்தை, தொழிற்பேட்டை முதலான பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.