தமிழகத்தில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு – தேர்வு வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0
தமிழகத்தில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு - தேர்வு வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு - தேர்வு வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!தமிழகத்தில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு - தேர்வு வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு – தேர்வு வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் இத்தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இத்தேர்வுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இத்தேர்வுக்கு B.Ed இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் – விதிமுறைகள் மாற்றம்! அரசாணை வெளியீடு!

இதையடுத்து இத்தேர்வுக்கான தேதிகள் குறித்த அறிவிப்புக்கு தேர்வர்கள் காத்திருந்தனர். அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வு வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிவித்தது. அதன்படி இத்தேர்வு நடைபெற இன்னும் 7 நாட்களே உள்ளது. இந்த நிலையில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக விண்ணப்பதாரர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அதாவது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும்.

Exams Daily Mobile App Download

இதே போல், 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனால் விண்ணப்பதாரர்கள் இன்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இத்தேர்வை நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 6 லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு நடைபெறும் என்று காத்திருந்து தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!