பிரசவத்திற்கு பின் நடிகை ஆலியா மானசா சொன்ன செய்தி – ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ் சின்னத்திரையில் டாப் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஆலியா மானசா, தன்னுடைய இரு பிரசவ காலத்திற்கு பின் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது பற்றி ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
நடிகை ஆலியா மானசா:
சின்னத்திரையில் ஒரு நடன நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி பின் சீரியலில் நடக்க வந்தவர் நடிகை ஆலியா மானசா. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் கர்ப்பமாக இருந்த நிலையில் ஆலியாவிற்கு ஐலா என்ற மகள் பிறந்தது. அதன் பின் மீண்டும் நடிப்பில் ஆலியா என்ட்ரி கொடுத்தார். விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் ஸ்லிம் பிட்டாக களமிறங்கினார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமாவின் புது அவதாரம் – ரசிகர்கள் உற்சாகம்!
வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் அந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த நிலையில் அவருக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அதனால் சீரியலை விட்டு அவர் விலகினார். தற்போது தனது மகனை அவர் கவனித்து வருகிறார். ஆலியா தனது மகனிற்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளார். தன்னுடைய மகன் முகத்தை இன்னும் காட்டாமல் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ஆலியா தன்னுடைய ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாவில் பதில் அளித்தார். அதில் இரு பிரசவத்தின் போதும் மன அழுத்தத்தில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என ரசிகர்கள் கேள்வி கேட்க, எனக்கு அது போல மன அழுத்தம் எதுவும் வரவில்லை. என்னை சஞ்சீவ் மற்றும் அவரது குடும்பம் அந்த அளவிற்கு பார்த்துக் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார். அதனால் ரசிகர்கள் அவருடைய சந்தோசமான பதிவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.