சர்வதேச தபால் சேவை தொடக்கம் – இனி வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பலாம்!
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு தபால், சர்வதேச பதிவு பார்சல், சர்வதேச பதிவு தபால், ஐ.டி.பி.எஸ் போன்ற சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
தபால் சேவை :
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனால் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை பணியாக நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது.
அக்டோபர் 6 முதல் UGC நெட் 2021 தேர்வுகள் – விண்ணப்ப பதிவு தொடக்கம்!
அதன் எதிரொலியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தொழில்களிலும் இயங்க அரசு அனுமதி வழங்குகிறது. அதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு தபால், சர்வதேச பதிவு பார்சல், சர்வதேச பதிவு தபால், ஐ.டி.பி.எஸ் போன்ற சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, விரைவு தபால் 67 நாடுகளுக்கும், சர்வதேச பதிவு பார்சல் 101 நாடுகளுக்கும், சர்வதேச பதிவு தபால் 99 நாடுகளுக்கும், ஐ.டி.பி.எஸ்., சேவை 14 நாடுகளுக்கும் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி வழக்கம் போல வெளிநாட்டில் இருக்கும் நம் சொந்தங்களுக்கு நீங்கள் அனுப்ப நினைக்கும் பொருட்களை அனுப்ப முடியும் தனியறை காட்டிலும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தபால்துறை தெரிவித்துள்ளது.